சி.பி.ஐ.க்கு 730 கோப்புகள் வழங்கியதாக மத்திய நிலக்கரி அமைச்சகம் தகவல்
நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல் தொடர்பாக சி.பி.ஐ.க்கு இதுவரை 730 கோப்புகள் வழங்கி உள்ளதாக மத்திய நிலக்கரித் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல் தொடர்பாக சி.பி.ஐ.க்கு இதுவரை 730 கோப்புகள் வழங்கி உள்ளதாக மத்திய நிலக்கரித் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அமைச்சகத்தின் அதிகாரி ஒருவர் கூறியதாவது: நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல் தொடர்பாக இதுவரை 730 கோப்புகள், வழங்கப்பட்டன. மேலும் 10 கோப்புகள் எங்களிடம் உள்ளன. அவற்றையும் பெற்றுக் கொள்ளுமாறு சி.பி.ஐ.க்கு தெரிவித்துள்ளோம்.
கடந்த 2004-ம் ஆண்டுக்கு முந்தைய சுரங்க ஒதுக்கீடு தொடர்பான 25 கோப்புகள் காணாமல் போய்விட்டன. அவற்றை கண்டுபிடிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. சி.பி.ஐ.க்கு தேவையான உதவிகளை செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
மேலும் சுரங்கங்களை ஒதுக்கக் கோரும் விண்ணப்பங்கள் தொடர்பான ஆவணங்களும் காணவில்லை. அவற்றை தேடிக் கண்டுபிடித்து சி.பி.ஐ.யிடம் ஒப்படைப்போம் என்றார் அவர்.