முகப்பு
இந்தியா

மேற்கு வங்கத்தில் ஆன்லைன் லாட்டரிக்குத் தடை:  மம்தா பானர்ஜி

மேற்கு வங்க மாநிலத்தில் இயங்கி வந்த ஆன்லைன் லாட்டரிக்கு அந்த மாநில அரசு தடை விதித்துள்ளது.

Updated On : 22 மே, 2013 at 2:19 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:11 PM

மேற்கு வங்க மாநிலத்தில் இயங்கி வந்த ஆன்லைன் லாட்டரிக்கு அந்த மாநில அரசு தடை விதித்துள்ளது.

இத்தடையை அறிவித்து, மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியது:

"ஆன்லைன் லோட்டோ' என்ற இந்தப் பரிசுச்சீட்டு விற்பனை, இடதுசாரிக் கூட்டணி ஆட்சியில் தொடங்கப்பட்டது. இது ஒரு சமூகப் பிரச்னையாகும். இதனால் குடும்ப உறுப்பினர்களிடையே கூட சண்டைகள் ஏற்பட்டுள்ளன. நாங்கள் குட்காவைத் தடை செய்தது போல், ஆன்லைன் லாட்டரிக்கும் தடை விதிக்கிறோம். விரைவில்

Advertisement

இதற்கான அரசு அறிவிக்கை வெளியிடப்படும்.

தொலைக்காட்சி சேனல்களில் ஆன்லைன் லாட்டரி குறித்த தகவல்களை ஒளிபரப்புவதைச் சிலர் தொடங்கியுள்ளனர். அந்த சேனல்களின் ஊழியர்கள் மீது எனக்குப் பரிவு உண்டு. ஆனால், சேனல்களை நடத்துவோருக்கு எதிராக நான் இருக்கிறேன். ஆன்லைன் லாட்டரியைத் தடை செய்யும் எனது முடிவை எதிர்த்து யாரும் நீதிமன்றத்துக்குச் செல்லலாம். அது குறித்து நான் எதுவும் கூறப் போவதில்லை என்றார் மம்தா பானர்ஜி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.