முகப்பு
இந்தியா

வெள்ள பாதிப்பு: இமாச்சலப் பிரதேசம், உத்தரப் பிரதேசத்தில் மீட்புப் பணி தீவிரம்

இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தரப் பிரதேச மாநிலங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இப்பணியில் ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

Updated On : 22 ஜூன் 2013, 12:55 am IST
பகிர்:

இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தரப் பிரதேச மாநிலங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இப்பணியில் ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

பலத்த மழையினால் சாலைகள் அடித்துச் செல்லப்பட்டதாலும், நிலச்சரிவினாலும் மாநிலத்தின் பல பகுதிகளில் ஏராளமானோர் சிக்கித் தவித்து வருகின்றனர்.

மீட்புப் பணியில் 2 ஹெலிகாப்டர்கள் வெள்ளிக்கிழமை ஈடுபடுத்தப்பட்டன. கின்னெளரில் சிக்கித் தவித்து வந்த சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர் வாசிகள் என 500-க்கும் மேற்பட்டவர்கள் மீட்கப்பட்டதாக மீட்புப் படையினர் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

இது தவிர பூஞ்ச், நகோ, கஸô உள்ளிட்ட மலைப் பகுதிகளில் நிறைய பேர் சிக்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்களை மீட்கும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான ரேஷன் பொருள்களையும், கூடாரம் அமைப்பதற்கான உபகரணங்களையும் ராணுவத்தினர் வழங்கி வருகின்றனர்.

பிரணாபின் பயணம் ரத்து: குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, இமாச்சலப் பிரதேசத்தில் வரும் 28-ம் தேதி முதல் ஜூலை 1-ம் தேதி வரை சுற்றுப்பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்தார். அங்கு, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணியில் மாநில அரசு தீவிரமாக ஈடுபட்டு வருவதால், பிரணாப் தனது பயணத்தை ரத்து செய்தார்.

13 மாவட்டங்களுக்கு தலா ரூ. 50 லட்சம்: உத்தரப் பிரதேசத்தில் கடந்த சில நாள்களில் பெய்த பலத்த மழையினால் 13 மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன.

மீட்புப் பணிகளுக்காக 13 மாவட்டங்களுக்கு தலா ரூ. 50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார் முதல்வர் அகிலேஷ் யாதவ்.

அங்கு வியாழக்கிழமை முதல் மழை பெய்யவில்லை என்றாலும், சாரதா மற்றும் கங்கை ஆறுகளில் வெள்ள நீர் வடியவில்லை. வெள்ளத்தின் காரணமாக யமுனை நதி பாலத்தின் வழியே கடந்த 4 நாள்களாக போக்குவரத்து அனுமதிக்கப்படவில்லை. இதனால், உத்தரப் பிரதேசம்-ஹரியாணா மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்து தடைபட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.