நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை!
டெலிகிராம் செயலிக்குத் தடை விதிப்பதால் வினாத்தாள் கசிவு நின்றுவிடப்போவதில்லை என அச்செயலியின் தலைமை செயல் அதிகாரி தெரிவித்துள்ளது குறித்து...
இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வையொட்டி (மறுதேர்வு) டெலிகிராம் செயலிக்கு மத்திய அரசு தற்காலிகத் தடை விதித்தது.
கடந்த மே 3 ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வில் டெலிகிராம் செயலி வாயிலாக முறைகேடுகள் நடந்தது உறுதி செய்யப்பட்ட நிலையில், அந்த தேர்வு ரத்து செய்யப்பட்டு, ஜூன் 21 ஆம் தேதி நீட் மறுதேர்வு நடைபெறவுள்ளது.
நீட் மறுதேர்வை எந்தவித முறைகேடுமின்றி சுமூகமாக நடத்தி முடிக்க பல்வேறு கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதித்துள்ளது. அந்தவகையில், தகவல் தொழில்நுட்பச் சட்டம், 2000-இன் பிரிவு 69A-ன் படி டெலிகிராம் செயலிக்கு மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தடை உத்தரவிட்டுள்ளது.
Advertisement
Advertisement
ஏற்கெனவே அனுப்பப்பட்ட செய்திகளைத் திருத்தும் வசதியை (message-editing feature) 30 ஜூன் 2026 வரை முடக்குமாறு டெலிகிராம் தளத்துக்கு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் இது தொடர்பாக பேசிய டெலிகிராம் தலைமை செயல் அதிகாரி பாவெல் டுரோவ், இந்தியாவில் டெலிகிராம் செயலிக்குப் பிறப்பிக்கப்பட்டுள்ள தற்காலிக தடையானது, 15 கோடி பயனர்களுக்கான தண்டனை எனக் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது:
''இந்திய அரசு பிறப்பித்துள்ள இந்த உத்தரவு லட்சக்கணக்கான பயனர்களை நியாயமற்ற முறையில் பாதிக்கிறது. இந்தியாவில் மட்டும் 15 கோடிக்கும் அதிகமான பனர்களுக்கு விதிக்கப்படும் தண்டனை இது.
சில பயனர்கள் கசிந்த தேர்வு வினாத்தாள்களை பகிர்ந்துகொண்டதால், ஒரு வார காலத்திற்கு டெலிகிராம் செயலிக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், வினாத்தாள் கசிவானது இதன்மூலம் நின்றுவிடப்போவதில்லை. அது மற்ற செயலிகளுக்கு மாறிவிட்டன'' எனக் குறிப்பிட்டுள்ளார்.