முகப்பு
இந்தியா

வங்கி தொடங்க எல்ஐசி, தபால் துறை உள்ளிட்ட 26 நிறுவனங்கள் விண்ணப்பம்

வங்கி தொடங்குவதற்கு உரிமம் கேட்டு எல்.ஐ.சி. வீட்டுவசதி நிதி நிறுவனம், இந்திய தபால் துறை

Updated On : 2 ஜூலை 2013, 1:20 am IST
பகிர்:

வங்கி தொடங்குவதற்கு உரிமம் கேட்டு எல்.ஐ.சி. வீட்டுவசதி நிதி நிறுவனம், இந்திய தபால் துறை உள்ளிட்ட 26 நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளன என்று ரிசர்வ் வங்கி திங்கள்கிழமை தெரிவித்திருக்கிறது.

புதிதாக வங்கி தொடங்குவதற்கான வழிமுறைகளை இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ரிசர்வ் வங்கி வெளியிட்டது.

தொடர்ந்து, ஜூன் மாதத்தில் இது தொடர்பாக சில விளக்கங்களையும் வெளியிட்டிருந்தது. திங்கள்கிழமை (ஜூலை 1) விண்ணப்பிப்பதற்கான கடைசி நாளா

Advertisement

Advertisement

கும்.

இந்த நிலையில், 26 விண்ணப்பங்கள் வந்துள்ளன என்று ரிசர்வ் வங்கி வெளியிட்ட செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

மத்திய அரசுக்கு சொந்தமான நிறுவனங்களும் தனியாரும் வங்கி உரிமம் கேட்டு விண்ணப்பித்துள்ளன.

 இதில் குறிப்பிடத் தக்க விண்ணப்பதாரர்கள் எல்.ஐ.சி. வீட்டுவசதி நிதி நிறுவனம் மற்றும் இந்திய தபால் துறையாகும்.

சென்னையைச் சேர்ந்த ஸ்ரீராம் கேபிடல், டாடா சன்ஸ், முத்தூட் ஃபைனான்ஸ், ஆதித்ய பிர்லா, ரிலையன்ஸ் கேபிடல் உள்ளிட்டவையும் விண்ணப்பித்துள்ளன.

 உரிமம் பெறும் நிறுவனங்கள் 18 மாதங்களில் வங்கியைத் தொடங்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.