ஆகஸ்ட் 12-ல் அனைத்துக் கட்சி கூட்டம்: தேர்தல் ஆணையம் ஏற்பாடு
தில்லியில் ஆகஸ்ட் 12-ஆம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்ததுள்ளது.
தில்லியில் ஆகஸ்ட் 12-ஆம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்ததுள்ளது.
அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் அறிக்கையில் இலவசங்கள் தொடர்பான வாக்குறுதிகளை வெளியிட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டு இருந்தது.
தேர்தல் அறிக்கையில் இலவசங்கள் தொடர்பான அறிவிப்புகள் வெளியிடுவதை தடுக்கவோ அல்லது கட்டுப்படுத்தவோ சட்டம் எதுவுமில்லை என்று உச்ச நீதிமன்றம் குறைபட்டிருந்தது.
Advertisement
இதன் தொடர்ச்சியாகவே இந்தக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில், கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள் தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட உள்ளது. இலவசங்கள் தொடர்பான அறிவிப்புகளை வெளியிட தெளிவான கொள்கையை உருவாக்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.