முகப்பு
இந்தியா

16 தெலுங்கு தேசம் எம்எல்ஏக்கள் ராஜிநாமா

ஆந்திர சட்டப் பேரவையின் பிரதான எதிர்க்கட்சியான தெலுங்கு தேசத்தைச் சேர்ந்த 16 உறுப்பினர்கள் தங்களது பதவியை வியாழக்கிழமை ராஜிநாமா செய்தனர்.

Updated On : 2 ஆகஸ்ட் 2013, 2:52 am IST
பகிர்:

ஆந்திர சட்டப் பேரவையின் பிரதான எதிர்க்கட்சியான தெலுங்கு தேசத்தைச் சேர்ந்த 16 உறுப்பினர்கள் தங்களது பதவியை வியாழக்கிழமை ராஜிநாமா செய்தனர்.

தெலங்கானா மாநிலம் உருவாக்கப்பட்ட பிறகு அமைய உள்ள ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த மக்களின் நலனுக்கு எத்தகைய உறுதியான உத்தரவாதத்தையும் அளிக்காததை கண்டித்து இவர்கள் இந்த முடிவை எடுத்துள்ளனர்.

16 பேரும் தங்களது கடிதங்களை சட்டப் பேரவைத் தலைவரின் அலுவலகத்துக்கு வியாழக்கிழமை இரவு ஃபேக்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். இந்த தகவலை அனந்தபூர் மாவட்டத்தைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர் பய்யாவலு கேசவ் தனியார் செய்தி நிறுவனத்துக்கு தெரிவித்தார்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.