முகப்பு
தமிழ்நாடு

சென்னை போரூர் அருகே இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை!

போரூர் அருகே இளம்பெண் ஒருவரை கடத்திச் சென்று பாலியல் தொல்லை அளித்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Updated On : 15 ஜூன் 2026, 3:52 pm IST
பாலியல் தொல்லை - பிரதிப் படம்
பகிர்:

சென்னை போரூர் அருகே இளம்பெண் ஒருவரை கடத்திச் சென்று பாலியல் தொல்லை அளித்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை போரூர் பகுதி மாங்காடு அருகே 23 வயது இளம்பெண் ஒருவரைக் கடத்திச் சென்று பாலியல் தொல்லை அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த பெண் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது.

இதுதொடர்பாக மாங்காடு பகுதியைச் சேர்ந்த தனவேல் (50) என்பவரை போரூர் அனைத்து மகளிர் காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

தனவேல் அப்பகுதியில் அடுக்குமாடி குடியிருப்புப் பணிகள் நடந்து வந்த பகுதியில் காவலராக பணிபுரிந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

இன்று காலை கும்மிடிப்பூண்டி அருகே 3 வயது பெண் குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவமும் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

summary

Young woman sexually harassed near Porur, Chennai

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.