முகப்பு
இந்தியா

இடஒதுக்கீடு விவகாரம்: உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரிக்கை

இடஒதுக்கீட்டுக்கு எதிராக உச்ச நீதிமன்றம் அளித்த உத்தரவுக்கு எதிராக தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசை எதிர்க் கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

Updated On : 12 ஆகஸ்ட், 2013 at 2:40 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:17 PM

இடஒதுக்கீட்டுக்கு எதிராக உச்ச நீதிமன்றம் அளித்த உத்தரவுக்கு எதிராக தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசை எதிர்க் கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு அண்மையில் அளித்த தீர்ப்பில், மருத்துவம் மற்றும் பிற தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் மேற்கொள்ளப்படும் பணி நியமனங்களில் எஸ்.சி., எஸ்.டி., மற்றும் பின்தங்கிய வகுப்பினருக்கான இடஒதுக்கீடு முறையை பின்பற்றக் கூடாது என உத்தரவிட்டது.

இந்த தீர்ப்பு சமூக நீதிக்கு எதிரானது என்று எதிர்க் கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தக்க நடவடிக்கையை மத்திய அரசு எடுக்க வேண்டும் என்று எதிர்க் கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

Advertisement

இந்தப் பிரச்னையை நாடாளுமன்றத்தில் எழுப்பப்போவதாக, ஐக்கிய ஜனதா தள தலைவர் சரத் யாதவ், பாஜக எம்.பி. ஹூகம்தேவ் நாராயண், இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் டி.ராஜா, பிஜு ஜனதா தளத்தைச் சேர்ந்த பி.கே.பட்சானி உள்ளிட்டோர் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.