முகப்பு
இந்தியா

தாக்குதலில் காயமடைந்த வீரர் உயிரிழப்பு

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் சம்பா மாவட்ட எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் வீரர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த வீரர், மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.

Updated On : 12 ஆகஸ்ட், 2013 at 1:31 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:17 PM

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் சம்பா மாவட்ட எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் வீரர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த வீரர், மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.

சம்பா மாவட்டத்தின், ராம்காட் பிரிவில் கடந்த 5-ம் தேதி நடந்த இத்தாக்குதலில் ராம் நிவாஸ் மீனா என்ற எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் படுகாயமடைந்தார்.

இதைத் தொடர்ந்து, தில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவர் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

Advertisement

பின்னர், ராம் நிவாஸ் மீனாவின் உடல் ராஜஸ்தானில் உள்ள அவரது சொந்த கிராமத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.