கொலை: ஒரே குடும்பத்தில் 7 பேருக்கு ஆயுள்
பிகார் மாநிலத்தில், பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒருவரை கொலை செய்த வழக்கில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேருக்கு புதன்கிழமை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:20 PM
பிகார் மாநிலத்தில், பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒருவரை கொலை செய்த வழக்கில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேருக்கு புதன்கிழமை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. கொய்முர் மாவட்ட விரைவு நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், "கதாவுரா பகுதியைச் சேர்ந்த லட்சுமிகாந்த் திவாரி என்பவரை 2001ஆகஸ்ட் 24ஆம் தேதி கொலை செய்த குற்றத்துக்காக, வழக்கில் தொடர்புடைய 7 பேருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்படுகிறது' என்றார். முன்பகை காரணமாக திவாரி கொலை செய்யப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.