FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

விழுப்புரம் - திருப்பதி விரைவு ரயில்: 8 நாள்கள் பகுதியளவு ரத்து

விழுப்புரம் - திருப்பதி விரைவு ரயில்: 8 நாள்கள் பகுதியளவு ரத்து

ரயில் - (கோப்புப்படம்)
பகிர்:

விழுப்புரம்-திருப்பதி இடையே விரைவு ரயில் வரும் ஜூன் 19 முதல் ஜூலை 13-ஆம் தேதி வரை காட்பாடியுடன் பகுதியளவு ரத்து செய்யப்படவுள்ளது.

இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

சென்னை ரயில்வே கோட்டத்தில் திருப்பதி, காட்பாடி இடையே தொழில்நுட்ப பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன்காரணமாக வரும் 19, 22, 26, 29 மற்றும் ஜூலை 3, 6, 10, 13 ஆகிய தேதிகளில் விழுப்புரத்தில் இருந்து காலை 5.40 மணிக்குப் புறப்பட்டு திருப்பதி செல்லும் விரைவு ரயில் காட்பாடியுடன் நிறத்தப்படும்.

Advertisement

Advertisement

மறுமாா்க்கத்தில் அந்த நாள்களில் பிற்பகல் 1.40 மணிக்கு திருப்பதில் இலிருந்து புறப்பட வேண்டிய விரைவு ரயில் காட்பாடியில் இருந்தே புறப்பட்டு விழுப்புரம் வந்தடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments