தெலங்கானாவுக்கு எதிர்ப்பு: கிருஷ்ணா மாவட்டத்தில் பந்த்
ஆந்திர மாநிலத்தைப் பிரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த மாநிலத்தின் கிருஷ்ணா மாவட்டத்தில் அரசு அலுவலர்கள் பந்த் நடத்தியதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
ஆந்திர மாநிலத்தைப் பிரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த மாநிலத்தின் கிருஷ்ணா மாவட்டத்தில் அரசு அலுவலர்கள் பந்த் நடத்தியதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
ஆந்திராவின் அரசு அலுவலர்கள் கூட்டமைப்பு சார்பில் கிருஷ்ணா மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் 48 மணி நேர பந்த்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
அந்த மாவட்டத்தின் அரசியல் கூட்டு நடவடிக்கை குழு, விஜயவாடா வர்த்தக மற்றும் தொழில் நிறுவனங்கள், மாணவர்கள் கூட்டமைப்பு, வழக்குரைஞர்கள் கூட்டமைப்பு, லாரி உரிமையாளர்கள் கூட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் பந்த்தில் பங்கேற்றன.
Advertisement
ஏற்கெனவே, அந்த மாநில அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் கடந்த ஆகஸ்ட் 12ஆம் தேதி முதல் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடைகள், ஓட்டல்கள், சிற்றுண்டிகள் மற்றும் அனைத்து வியாபார நிறுவனங்களும் பந்த்துக்கு ஆதரவு தெரிவித்து கடைகளை மூடியிருந்தனர். கல்வி நிறுவனங்களும் விடுமுறை அளித்தன. பந்த்தின்போது, அரசியல் கூட்டு நடவடிக்கைக்குழுவினர் சைக்கிள் மற்றும் மோட்டார் சைக்கிள் பேரணி நடத்தினர்.