இந்திய பெண் எழுத்தாளர் கொலை: மேலும் 4 பேர் கைது
இந்திய பெண் எழுத்தாளர் சுஷ்மிதா பானர்ஜி கொல்லப்பட்டது தொடர்பாக மேலும் 4 பேரை ஆப்கன் போலீஸார் கைது செய்தனர்.
இந்திய பெண் எழுத்தாளர் சுஷ்மிதா பானர்ஜி கொல்லப்பட்டது தொடர்பாக மேலும் 4 பேரை ஆப்கன் போலீஸார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட நவாப், ரிஷி கான், முகமது ரஹீம் மற்றும் மீர் ஹம்ஸா ஆகிய 4 பேரிடமும் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இவர்களையும் சேர்த்து, இந்த வழக்கில் மொத்தம் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Advertisement
இந்தக் கொலையில், ஹக்கானி கும்பலுக்குத் தொடர்பிருக்கலாம் என ஆப்கன் போலீஸார் தெரிவித்துள்ளனர்.
தலிபான் தீவிரவாதிகளிடம் இருந்து தப்பித்தது தொடர்பாக சுஷ்மிதா பானர்ஜி எழுதிய புத்தகம் பின்னர் திரைப்படமாக வெளிவந்தது. அதில் தீவிரவாதிகளை கடுமையாக சாடியிருந்ததாக காட்டப்பட்டிருந்தது. அதனால், ஆத்திரமடைந்த தீவிரவாதிகள் சுஷ்மிதா பானர்ஜியை கொலை செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.