ஜாமீன் கோரி ஜெகன்மோகன் மனு
சொத்தக் குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஜெகன்மோகன் ரெட்டி, தன்னை ஜாமீனில் வெளிவிட வேண்டும் எனக் கேட்டு சிறப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
சொத்தக் குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஜெகன்மோகன் ரெட்டி, தன்னை ஜாமீனில் வெளிவிட வேண்டும் எனக் கேட்டு சிறப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
தன் மீதான ஊழல் தொடர்பான விசாரணையை சிபிஐ முடித்து விட்ட நிலையில், தன்னை ஜாமீனில் விட வேண்டும் என அந்த மனுவில் கேட்டுக் கொண்டார்.
இதை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், இந்த வழக்கை வியாழக்கிழமை விசாரணைக்கு எடுத்துக்
Advertisement
கொள்வதாகவும், இதுதொடர்பாக சிபிஐ பதில் மனுத்தாக்கல் செய்யுமாறும் உத்தரவிட்டது.
இதற்கிடையே சிபிஐ புதன்கிழமை மூன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இந்த வழக்கில் இதுவரை 8 குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் ஜெகன்மோகன் ரெட்டி கடந்தாண்டு மே 27ஆம் தேதி கைது செய்யப்பட்டு, ஹைதராபாதில் உள்ள சன்சல்குடா சிறையில் அடைக்கப்பட்டார்.
இதற்கிடையே கடந்த மே 9ஆம் தேதி ஜெகன்மோகன் ரெட்டியின் ஜாமீன் மனுவை நிராகரித்த உச்சநீதிமன்றம், இதுதொடர்பாக சிபிஐ புலனாய்வு செய்து 4 மாத்துக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. தற்போது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், ஜெகன்மோகன் ரெட்டி ஜாமீன் கேட்டு மனு செய்துள்ளார்.