இந்தியா

மனைவியின் மன ரீதியான துன்புறுத்தல்: கணவன் தூக்கிட்டு தற்கொலை!

மனைவியின் உடல் மற்றும் மன ரீதியான துன்புறுத்தல் காரணமாக கணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

PTI

நாசிக்: மனைவியின் உடல் மற்றும் மன ரீதியான துன்புறுத்தல் காரணமாக கணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் அருகே உள்ளது ஓஜார் பகுதி. இங்கு வசித்து வருபவர் சந்தோஷ் பவார்.(32). தனியார் நிறுவன ஊழியர். நேற்று தனது வீட்டில் உத்திரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட  நிலையில் இவரது உடல் கண்டெடுக்கப்பட்டது. அவர் உடலில் இருந்து கைப்பற்றப்பட்ட கடிதம் ஒன்றில் தனது மனைவி மற்றும் அவரது சகோதரர்களின் மனம் மற்றும் உடல்  ரீதியிலான துன்புறுத்தல்கள் காரணமாகவே தான் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து சந்தோஷின் சகோதரர் சச்சின் கொடுத்த புகாரின் அடிப்படையில் சந்தோஷின் மனைவி ப்ரியா, அவரது சகோதரர்கள் கிருஷ்ணா ஷிண்டே, விஷ்ணு ஷிண்டே மற்றும் அப்பா போர்குடேஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை யாரும் கைது செய்யபபடவில்லை.     

பிரேத பரிசோதனைக்கு பிறகு சந்தோஷின் உடல் அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

15 லட்சம் ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்ட ஏலேல சிங்க விநாயகர்!

ஐபிஎல்லில் இருந்து அஸ்வின் திடீர் ஓய்வு! ரசிகர்கள் அதிர்ச்சி!

தங்கம் விலை மீண்டும் ரூ. 75 ஆயிரத்தை கடந்தது!

விநாயகர் சதுர்த்தி: தவெக தலைவர் விஜய் வாழ்த்து!

விநாயகா் சதுா்த்தி: விநாயகர் கோயில்களில் திரளமான பக்தர்கள் தரிசனம்

SCROLL FOR NEXT