பிகாரில் வாஜ்பாயி சிலை: நிதீஷ் குமார் அறிவிப்பு
பாஜக நிறுவனத் தலைவர்களில் ஒருவரும், முன்னாள் பிரதமருமான அடல் பிஹாரி வாஜ்பாயி 94-ஆவது பிறந்த தினம் நாடு முழுவதும் செவ்வாய்கிழமை கொண்டாடப்படுகிறது.
பாஜக நிறுவனத் தலைவர்களில் ஒருவரும், முன்னாள் பிரதமருமான அடல் பிஹாரி வாஜ்பாயி 94-ஆவது பிறந்த தினம் நாடு முழுவதும் செவ்வாய்கிழமை கொண்டாடப்படுகிறது. இதையடுத்து பிரதமர் மோடி உட்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், வாஜ்பாயிக்கு மரியாதை செலுத்தினர்.
இந்நிலையில், வாஜ்பாயி சிலை விரைவில் திறக்கப்படும் என ஐக்கிய ஜனதாதளக் கட்சியின் மூத்த தலைவரும், பிகார் முதல்வருமான நிதீஷ் குமார் செவ்வாய்கிழமை தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் கூறியதாவது, முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயி-க்கு பாட்னாவில் சிலை அமைக்கப்படும். விரைவில் அதற்கான இடமும் தேர்வு செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.
Advertisement
Advertisement
முன்னதாக, 25 அடி உயரத்தில் உத்தரப்பிரதேசத்தின் லக்னோவில் அமைந்துள்ள லோக் பவனில் அடல் பிஹாரி வாஜ்பாயி சிலை அமைக்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.