முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்த தினம்: நினைவிடத்தில் பிரதமர் மோடி உள்ளிட்டோர் மரியாதை
முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 94-வது பிறந்த தினத்தையொட்டி தில்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் பிரதமர் மோடி உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.
முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 94-வது பிறந்த தினத்தையொட்டி தில்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் பிரதமர் மோடி உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.
முன்னாள் பிரதமரும், பா.ஜ.க-வின் மூத்தத் தலைவருமான வாஜ்பாய் கடந்த ஆகஸ்ட் மாதம் காலமானார். இதையடுத்து அவருக்கு தில்லி ராஷ்ட்ரீய ஸ்மிருதி தலம் பகுதியில் ரூ.10.51 கோடி செலவில் நினைவிடம் கட்டப்பட்டுள்ளது. சதைவ் தலம் என பெயரிடப்பட்டுள்ள அந்த நினைவிடம் வாஜ்பாயின் 94ஆவது பிறந்த தினத்தையொட்டி இன்று திறக்கப்பட்டது.
இதில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், துணை குடியரசுத் தலைவர் வெங்கய்ய நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, பாஜக மூத்த தலைவர் அத்வானி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட தலைவர்கள், பிரபலங்கள் கலந்துகொண்டனர். தொடர்ந்து அவர்கள், வாஜ்பாய் நினைவிடத்தில் மரியாதையும் செலுத்தினர்.
Advertisement
Advertisement
இதேபோல் நாடு முழுவதிலும் உள்ள பாஜக அலுவலகங்களிலும் வாஜ்பாய் உருவப்படம் அலங்கரித்து வைக்கப்பட்டு, மரியாதை செலுத்தப்படுகிறது. முன்னதாக வாஜ்பாயின் பிறந்த தினத்தை முன்னிட்டு நேற்று அவரது உருவம் பொறித்த ரூ.100 நாணயத்தை பிரதமர் மோடி வெளியிட்டள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.