விவசாயிகள் பிரச்னைகளைத் தீர்ப்பதில் உத்தரப் பிரதேச அரசு தோல்வி: அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டு
உத்தரப் பிரதேசத்தை ஆளும் பாஜக தலைமையிலான அரசு வேலைவாய்ப்பை உருவாக்குவதிலும், விவசாயிகளின் பிரச்னைகளைத் தீர்ப்பதிலும் தோல்வியடைந்து விட்டதாக
உத்தரப் பிரதேசத்தை ஆளும் பாஜக தலைமையிலான அரசு வேலைவாய்ப்பை உருவாக்குவதிலும், விவசாயிகளின் பிரச்னைகளைத் தீர்ப்பதிலும் தோல்வியடைந்து விட்டதாக அந்த மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், சமாஜவாதி கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவ் குற்றம்சாட்டியுள்ளார்.
இது குறித்து, லக்னெளவில் திங்கள்கிழமை நடைபெற்ற விழா ஒன்றில் அவர் கூறியதாவது:
சமூகத்தின் அனைத்துப் பிரிவு மக்களும் பாஜக தலைமையிலான ஆட்சியின் கீழ் பிரச்னைகளைச் சந்தித்து வருகின்றனர். கடன்சுமை அதிகமான விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கின்றனர். மாநில இளைஞர்களின் எதிர்காலம் இருள் சூழந்து காணப்படுகிறது. இளம்தலைமுறையினரின் கனவுகளை பாஜக அரசு குழி தோண்டி புதைத்து வருகிறது. இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கித் தருவதில் மாநில அரசு தோல்வி கண்டுள்ளது.
தனக்குச் சிறிய அளவில் எதிர்ப்பு ஏற்படுவதையும் முதல்வர் யோகி ஆதித்யநாத் விரும்பவில்லை. தங்களது பிரச்னைகளைத் தெரிவிக்கும் இளைஞர்களை மாநில அரசு சிறைக்கு அனுப்பி வைக்கிறது. மாணவிகளும் காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர் என்றார் அவர்.
லக்னௌவில் யோகி ஆதித்யநாத் கடந்த ஆண்டு காரில் சென்றபோது சமாஜவாதி கட்சியைச் சேர்ந்த மாணவர் அமைப்பினர், காரை மறித்து கருப்புக் கொடி காட்டினர். இதைத் தொடர்ந்து, அவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களில், 2 மாணவிகளும் அடங்குவர். 20 நாள்களுக்குப் பிறகு அவர்கள் அனைவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.