முகப்பு
இந்தியா

மத்தியப் பிரதேசத்தில் பாஜக வேட்பாளர் மரணம்

மத்தியப் பிரதேச மாநிலம், பர்வானி மாவட்டத்தின் ராஜ்புர் தொகுதி பாஜக வேட்பாளரும், மாநில முன்னாள் அமைச்சருமான தேவிசிங் படேல்(66) மாரடைப்பால் திங்கள்கிழமை மரணமடைந்தார்.

Updated On : 6 நவம்பர் 2018, 12:59 am IST
பகிர்:


மத்தியப் பிரதேச மாநிலம், பர்வானி மாவட்டத்தின் ராஜ்புர் தொகுதி பாஜக வேட்பாளரும், மாநில முன்னாள் அமைச்சருமான தேவிசிங் படேல்(66) மாரடைப்பால் திங்கள்கிழமை மரணமடைந்தார்.
இது குறித்து, மாநில பாஜக நிர்வாக உறுப்பினரும், படேலின் நெருங்கிய நண்பருமான ஓம் சோனி கூறியதாவது:
சில மாதங்களுக்கு முன்பு மாரடைப்பால் பாதிக்கப்பட்ட தேவிசிங் படேல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இந்நிலையில், திங்கள்கிழமை காலை மீண்டும் மாரடைப்பால் பாதிக்கப்பட்ட அவர், உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, தீவிர சிகிச்சைப் பிரிவில் வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார் என்று அவர் தெரிவித்தார். படேல், முன்னாள் முதல்வர் உமா பாரதி தலைமையிலான ஆட்சியில் அமைச்சராக இருந்தார். 
கடந்த 1990-ஆம் ஆண்டு, முதன் முதலாகச் சட்டப்பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட படேல், பின்னர் 1998, 2003, 2008 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல்களில், ராஜ்புர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். கடந்த 2013-ஆம் ஆண்டு நடந்த தேர்தலில், காங்கிரஸ் வேட்பாளர் பாலா பச்சனிடம் தோல்வியடைந்தார். 
வரும் 28-ஆம் தேதி, மாநிலத்தில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில், ராஜ்புர் தொகுதியில் படேல் மீண்டும் போட்டியிடுவார் என்று கடந்த 2-ஆம் தேதி பாஜக அறிவித்திருந்தது. இந்நிலையில், எதிர்பாராத வகையில் அவர் மரணமடைந்திருப்பது மாநில பாஜக நிர்வாகிகளை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது இறுதிச் சடங்குகள் சொந்த ஊரான பந்தர்கச் பகுதியில் நடைபெறும் என்று உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments