முகப்பு
இந்தியா

தில்லி சர்வதேச விமான நிலையத்தில் ராஷ்டிரிய ஜனதா தளம் எம்எல்ஏ கைது

தில்லி சர்வதேச விமான நிலையத்தில் லாலு பிரசாத்தின் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியை சேர்ந்த பிகார் எம்எல்ஏ சந்திரசேகரை போலீஸார் கைது

Updated On : 22 பிப்ரவரி 2019, 9:58 am IST
பகிர்:


புதுதில்லி: தில்லி சர்வதேச விமான நிலையத்தில் லாலு பிரசாத்தின் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியை சேர்ந்த பிகார் எம்எல்ஏ சந்திரசேகரை போலீஸார் கைது செய்துள்ளனர். 

பிகார் மாநிலம் மாதேபுரா சதார் தொகுதி ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி எம்எல்ஏ சந்திரசேகர். இவர் கடந்த புதன்கிழமை (பிப்.20) தில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தார். அப்போது தனது உடைமைகளுடன் 10 துப்பாக்கி குண்டுகளை எடுத்து வந்துள்ளார். 

இதையடுத்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டதை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.