புதுச்சேரியிலும் பிளாஸ்டிக்கிற்கு தடை: மார்ச் 1-ம் தேதி முதல் அமல்
தமிழகத்தை தொடந்து புதுச்சேரியிலும் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு மார்ச் 1-ம் தேதி முதல் தடை அமல்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
புதுச்சேரி: தமிழகத்தை தொடந்து புதுச்சேரியிலும் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு மார்ச் 1-ம் தேதி முதல் தடை அமல்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் குறிப்பிட்ட அளவு தடிமன் வரை கொண்ட பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்துவதற்கு, கடந்த 1-ஆம் தேதி முதல் தடை விதிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்திருந்தது. அது கூடுமானவரை தீவிரமாக நடைமுறைப்படுத்தப்பட்டும் வருகிறது.
இந்நிலையில் தமிழகத்தை தொடந்து புதுச்சேரியிலும் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு மார்ச் 1-ம் தேதி முதல் தடை அமல்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Advertisement
Advertisement
இதுதொடர்பாக முதல்வர் நாராயணசாமி தலைமையிலான அமைச்சரவை கூடி முடிவு எடுத்துள்ளது. அதன்படி ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கிற்கு தடை விதிப்பது என்றும், இந்த தடையானது வரும் மார்ச் 1-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என்றும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.