ஆர்எஸ்எஸ் பிரமுகர் படுகொலை
மத்தியப் பிரதேசத்தின் ரத்லம் மாவட்டத்தில் ஆர்எஸ்எஸ் பிரமுகர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
மத்தியப் பிரதேசத்தின் ரத்லம் மாவட்டத்தில் ஆர்எஸ்எஸ் பிரமுகர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக அந்த மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் பிரதீப் சர்மா கூறியதாவது: ஹிம்மத் படிதார் (36) என்ற அந்த நபர், ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஷிவ்பூர் மண்டல முன்னாள் தலைவர் ஆவார். இவர், காமத் கிராமத்திலுள்ள வயல்வெளிக்கு செவ்வாய்க்கிழமை இரவு சென்றுள்ளார். அதன் பிறகு, வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த குடும்பத்தினர், அவரைத் தேடத் தொடங்கினர். அப்போது, வயல்வெளியில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில், அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டது.
அவரது முகமும் தீவைத்து எரிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்ததும், சம்பவ இடத்துக்கு சென்ற காவல்துறையினர், சடலத்தை கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இக்கொலை தொடர்பாக அடையாளம் தெரியாத நபர்களுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது என்றார் பிரதீப் சர்மா.