முகப்பு
இந்தியா

இ-சிகரெட்டுக்கு தடை விதிக்கும் அவசரச் சட்டம்: மத்திய அரசு பிறப்பித்தது

இ-சிகரெட்டுக்கு தடை விதிக்கும் அவசரச் சட்டத்தை மத்திய அரசு வியாழக்கிழமை பிறப்பித்தது. முன்னதாக, இந்த முடிவுக்கு மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் அளித்தது.

Updated On : 20 செப்டம்பர் 2019, 1:33 am IST
பகிர்:


இ-சிகரெட்டுக்கு தடை விதிக்கும் அவசரச் சட்டத்தை மத்திய அரசு வியாழக்கிழமை பிறப்பித்தது. முன்னதாக, இந்த முடிவுக்கு மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் அளித்தது.
இதன்படி, இந்தியாவில் இ-சிகரெட் தயாரிப்பு, இறக்குமதி, ஏற்றுமதி, விநியோகம், விற்பனை,  இ-சிகரெட் சார்ந்த புகைப் பிடிக்கும் கருவிகள் தொடர்பான விளம்பரங்கள் ஆகிவற்றை வெளியிடுவது தண்டனைக்குரிய குற்றமாகும். இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோருக்கு முதல் முறை ரூ.1 லட்சம் அபராதமும், ஓராண்டு சிறைத் தண்டனையும் விதிக்கப்படும். இரண்டாவது முறையாக அதே தவறைச் செய்தால் 3 ஆண்டு சிறையும், ரூ.5 லட்சம் அபராதமும் விதிக்கப்படும்.
அதேபோல இ-சிகரெட் வைத்திருந்தால் ரூ.50,000 அபராதம் அல்லது 6 மாதம் சிறை அல்லது இவை இரண்டும் சேர்ந்து விதிக்கப்பட வாய்ப்புள்ளது. இது தவிர இ-சிகரெட் வைத்திருப்பதாகவோ, உற்பத்தி செய்வதாகவோ சந்தேகம் எழுந்தால் சோதனை நடத்தவும் அதிகாரிகளுக்கு இந்த அவசரச் சட்டம் மூலம் அனுமதி அளிக்கப்படுகிறது. இதற்கு முன்பு இ-சிகரெட் வைத்திருப்பதாக சந்தேகத்தின் பேரில் சோதனை நடத்த முடியாது என்ற நிலை இருந்தது.
இப்போது கைவசம் இ-சிகரெட்டுகளை இருப்பு வைத்திருப்பவர்கள், அது தொடர்பான முழு விவரத்தையும் அதிகாரிகளிடம் உடனடியாகத் தெரிவிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எனினும், இப்போது இ-சிகரெட் விநியோகஸ்தர்கள், விற்பனையாளர்கள் மற்றும் பயன்படுத்துவோர் மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்தியாவில் பெரிய அளவில் லாபம் சம்பாதித்து வரும் சாதாரண வகை சிகரெட் தயாரிப்பாளர்களை ஆதரிக்கும் நோக்கத்திலேயே மத்திய அரசு இந்த நடவடிக்கை எடுத்துள்ளது. இ-சிகரெட் பிரபலமானால், அவர்களது வர்த்தகம் பெருமளவில் பாதிக்கப்படும். எனவேதான் இ-சிகரெட்டை மத்திய அரசு உள்நோக்கத்துடன் தடை செய்துள்ளது என்று அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments