பத்ரிநாத் கோயிலில் உள்ளூர் கிராம மக்களுக்கு மட்டும் அனுமதி
உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற பத்ரிநாத் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய உள்ளூர் கிராம மக்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற பத்ரிநாத் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய உள்ளூர் கிராம மக்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில், 5-ம் கட்ட ஊரடங்கில் வழிபாட்டுத் தலங்களுக்கு ஒருசில கட்டுப்பாடுகளுடன் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, பத்ரிநாத் கோயில் அமைந்துள்ள சமோலி மாவட்ட நிர்வாகம், அக்கோயிலைச் சுற்றியுள்ள மானா, பாம்னி ஆகிய கிராமங்களில் வசிக்கும் உள்ளூர் மக்களுக்கு மட்டும் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
முகக் கவசம் அணிந்தபடியும், சமூக இடைவெளி பின்பற்றியும் மக்கள் சுவாமி தரிசனம் செய்துவருகின்றனர்.
உத்தரகண்ட் மற்றும் பிற மாநிலத்திலிருந்து மக்களுக்கு ஜூன் 30-ம் தேதி வரை சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படமாட்டாது என்று நிர்வாகம் அறிவித்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.