இரண்டாவதாக கோவேக்ஸின் தடுப்பூசிக்கு ஒப்புதல்
பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவேக்ஸின் கரோனா தடுப்பூசியை அவசர காலத்தில் பயன்படுத்த இந்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பின் நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளது.
பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவேக்ஸின் கரோனா தடுப்பூசியை அவசர காலத்தில் பயன்படுத்த இந்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பின் நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளது.
கோவேக்ஸின் தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்க கூடுதல் தரவுகளைச் சமர்ப்பிக்க வேண்டும் என நிபுணர் குழு வெள்ளிக்கிழமை கேட்டிருந்த நிலையில், இன்று பிற்பகல் அதைத் தயாரித்த ஹைதராபாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனத்தைச் சந்திப்புக்கு அழைத்திருந்தது.
இதைத் தொடர்ந்து, அவசர பயன்பாட்டுக்கு கோவேக்ஸின் பரிந்துரை செய்யப்பட்டது. எனினும், இறுதி முடிவை இந்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பே எடுக்கவுள்ளது.
Advertisement
Advertisement
முன்னதாக, சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா தயாரித்த கோவிஷீல்ட் - ஆக்ஸ்ஃபோர்டு தடுப்பூசியை அவசர பயன்பாட்டுக்கு நிபுணர் குழு பரிந்துரைத்தது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.