ஜன. 14-க்குள் கரோனா தடுப்பூசி: உ.பி. முதல்வர்
உத்தரப் பிரதேசத்தில் ஜனவரி 14-ஆம் தேதிக்குள் கரோனா தடுப்பூசி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என்று முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் ஜனவரி 14-ஆம் தேதிக்குள் கரோனா தடுப்பூசி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என்று முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர், கடந்த மார்ச் மாதம் முதல் பிரதமர் நரேந்திர மோடி தலைமையின் கீழ் கரோனா தடுப்பூசிக்கு எதிரான பிரசாரம் நடைபெற்று வருகிறது.
ஜனவரி 5-ஆம் தேதி முதல் மாநிலத்தில் கரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெறவுள்ளது. அதனைத் தொடர்ந்து வரும் 14-ஆம் தேதிக்குள் மக்கள் பயன்பாட்டிற்கு கரோனா தடுப்பூசி கொண்டுவரப்படும் என்று கூறினார்.
Advertisement
Advertisement
ஒரு சில மாநிலங்களில் இன்று முதல் கரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெற்று வருகிறது. அதனைத் தொடர்ந்து உத்தரப் பிரதேசத்திலும் தடுப்பூசி ஒத்திகை நடத்தப்படும் என்று குறிப்பிட்டார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.