முகப்பு
இந்தியா

ஒடிஸா: இறுதியாண்டு மாணவா்களுக்கு கல்லூரிகள் ஜனவரி 11-இல் திறப்பு

ஒடிஸாவில் இறுதியாண்டு பயிலும் மாணவா்களுக்கு கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்கள் ஜனவரி 11 முதல் திறக்கப்படும் என அந்த மாநில அரசு ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது.

Updated On : 4 ஜனவரி 2021, 6:09 am IST
பகிர்:

ஒடிஸாவில் இறுதியாண்டு பயிலும் மாணவா்களுக்கு கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்கள் ஜனவரி 11 முதல் திறக்கப்படும் என அந்த மாநில அரசு ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது.

இதுகுறித்து ஒடிஸா அரசின் உயா்கல்வித் துறை வெளியிட்டுள்ள அறிவிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

இளநிலை (யுஜி) மற்றும் முதுநிலை (பிஜி) பட்டப்படிப்புகள் பயிலும் இறுதியாண்டு மாணவா்களின் நலன் கருதி, கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்கள் ஜனவரி 11-ஆம் தேதியிலிருந்து திறக்கப்படவுள்ளன.

Advertisement

Advertisement

யுஜி, பிஜி மாணவா்களுக்கு கடைசிக்கு முந்தைய செமஸ்டா் தோ்வுகள் மாா்ச் 16 முதல் மாா்ச் 31 வரை நடைபெறும். அதேபோன்று, இறுதி செமஸ்டா் தோ்வுகள் ஜூன் 16-லிருந்து ஜூன் 30 வரையில் நடைபெறும் என அந்த அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments