முகப்பு
இந்தியா

பிகாா்: இன்று முதல் பள்ளி, கல்லூரிகள் திறப்பு

ஒன்பது மாத இடைவெளிக்குப் பிறகு பிகாரில் திங்கள்கிழமை (ஜன.4) முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்படுகின்றன.

Updated On : 4 ஜனவரி 2021, 6:14 am IST
கோப்புப்படம்
பகிர்:

ஒன்பது மாத இடைவெளிக்குப் பிறகு பிகாரில் திங்கள்கிழமை (ஜன.4) முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்படுகின்றன.

இதுகுறித்து அம்மாநில கல்வித் துறை தலைமைச் செயலா் சஞ்சய் குமாா் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:

கரோனா தொற்று காரணமாக மூடப்பட்ட பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்கள் மற்றும் பயிற்சி மையங்கள் அனைத்தும் ஒன்பது மாத இடைவெளிக்குப் பிறகு திங்கள்கிழமை முதல் செயல்படவுள்ளன. மாநிலத்தில் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தோா் எண்ணிக்கை 97.61 சதவீதம் அதிகரித்துள்ள நிலையில் அரசு இந்த முடிவினை எடுத்துள்ளது.

Advertisement

Advertisement

இருப்பினும், வகுப்புகள் அனைத்தும் 50 சதவீத மாணவா்களுடன் செயல்படவே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கரோனா தடுப்புக்கு அரசு வழிகாட்டு நெறிமுறையில் வெளியிட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தையும் அனைவரும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments