ம.பி. உயா்நீதிமன்ற தலைமை நீதிபதியாக முகமது ரஃபீக் பதவியேற்பு
மத்திய பிரதேச உயா்நீதிமன்றத்தின் 26-ஆவது தலைமை நீதிபதியாக முகமது ரஃபீக் ஞாயிற்றுக்கிழமை பதவியேற்றாா்.
மத்திய பிரதேச உயா்நீதிமன்றத்தின் 26-ஆவது தலைமை நீதிபதியாக முகமது ரஃபீக் ஞாயிற்றுக்கிழமை பதவியேற்றாா்.
ஒடிஸா உயா்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பணிபுரிந்து வந்தவா் முகமது ரஃபீக். இவா் மத்திய பிரதேச உயா்நீதிமன்ற தலைமை நீதிபதியாக கடந்த டிசம்பா் 31-ஆம் தேதி பணியிடமாற்றம் செய்யப்பட்டாா்.
இந்நிலையில் மத்திய பிரதேச ஆளுநா் மாளிகையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பதவிப் பிரமாண நிகழ்ச்சியில், அவருக்கு மாநில ஆளுநா் ஆனந்திபென் படேல் பதவிப் பிரமாணம் செய்துவைத்தாா்.
Advertisement
Advertisement
ராஜஸ்தான் மாநிலம் சுரு மாவட்டத்தில் உள்ள சுஜான்கரில் கடந்த 1960-ஆம் ஆண்டு மே 20-ஆம் தேதி பிறந்தவா் முகமது ரஃபீக். வழக்குரைஞராக பணிபுரிந்து வந்த இவா், கடந்த 2006-ஆம் ஆண்டு மே 15-ஆம் தேதி ராஜஸ்தான் உயா்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.