முகப்பு
இந்தியா

பறவைக் காய்ச்சல்: மாவட்ட நிர்வாகங்களுக்கு கர்நாடக அரசு அறிவுறுத்தல்

கர்நாடகத்தில் இதுவரை பறவைக் காய்ச்சல் கண்டறியப்படாத நிலையில், போதிய பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்குமாறு மாவட்ட நிர்வாகங்களுக்கு துணை முதல்வர் லஷ்மன் சவாடி அறிவுறுத்தியுள்ளார்.

Updated On : 7 ஜனவரி 2021, 3:45 pm IST
கர்நாடகத்தில் பறவைக் காய்ச்சல்: மாவட்ட நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தல்
பகிர்:


கர்நாடகத்தில் இதுவரை பறவைக் காய்ச்சல் கண்டறியப்படாத நிலையில், போதிய பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்குமாறு மாவட்ட நிர்வாகங்களுக்கு துணை முதல்வர் லஷ்மன் சவாடி அறிவுறுத்தியுள்ளார்.

பறவைகளைத் தாக்கும் பறவைக் காய்ச்சல் கேரள மாநிலத்தில் கண்டறியப்பட்டுள்ள நிலையில் தற்போது பல்வேறு மாநிலங்களில் பரவி வருகிறது

ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் கண்டறியப்பட்டு வரும் நிலையில், பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மத்தியக் குழுவினர் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

Advertisement

Advertisement

நாடு முழுவதும் பறவைக் காய்ச்சல் நடவடிக்கைகளை கண்காணிக்க மத்திய அரசு, தில்லியில் கண்காணிப்பு மையம் ஒன்றையும் அமைத்துள்ளது.

இதனிடையே அண்டை மாநிலமான கேரளத்தில் பறவைக் காய்ச்சலால் 62 ஆயிரத்திற்கும் அதிகமான பறவைகள் கொல்லப்பட்டுள்ளன. இதனால் கேரளத்திலிருந்து கோழி உள்ளிட்டவற்றை இறக்குமதி செய்ய வேண்டாம் என்று கர்நாடக அரசு அறிவித்துள்ளது.

கர்நாடகத்தில் இதுவரை பறவைக் காய்ச்சல் கண்டறியப்படாத நிலையில், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகங்களுக்கு துணை முதல்வர் லஷ்மன் சவாடி அறிவுறுத்தியுள்ளார்.

கேரள மாநிலத்தின் எல்லையில் அமைந்துள்ள தக்‌ஷன கன்னடா, குடகு, மைசூரு ஆகிய மாவட்டங்கள் அதிக முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments