மேற்கு வங்கத்தில் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி இலவசம்: மம்தா
மேற்கு வங்கத்தில் அனைவருக்கும் இலவசமாக கரோனா தடுப்பூசி வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி இன்று (ஜன. 10) அறிவித்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் அனைவருக்கும் இலவசமாக கரோனா தடுப்பூசி வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி இன்று (ஜன. 10) அறிவித்துள்ளார்.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் கரோனா வைரஸ் தொற்று பரவி வரும் நிலையில், கரோனா தடுப்பூசி மருந்து ஒத்திகை நடைபெற்று வந்தது.
இதனைத்தொடர்ந்து நாட்டு மக்களுக்கு வரும் 16-ஆம் தேதி முதல் கரோனா தடுப்பூசி வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது.
Advertisement
Advertisement
இந்நிலையில், மேற்கு வங்கத்தில் அனைவருக்கும் இலவசமாக கரோனா தடுப்பூசி வழங்கப்படும் என்று முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.
கரோனா தடுப்பூசி மருந்தை மாநில மக்கள் அனைவருக்கும் எந்த ஒரு செலவும் இன்றி இலவசமாக வழங்குவதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் கூறினார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.