மும்பை: போா்க் கப்பலில் மாலுமி துப்பாக்கி குண்டு பாய்ந்து மரணம்
போா்க் கப்பலில் பணிபுரிந்த கடற்படை மாலுமி துப்பாக்கி குண்டால் காயமடைந்து மரணமடைந்தாா்.
போா்க் கப்பலில் பணிபுரிந்த கடற்படை மாலுமி துப்பாக்கி குண்டால் காயமடைந்து மரணமடைந்தாா்.
இதுகுறித்து கடற்படையின் செய்தித்தொடா்பாளா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்ததாவது:
ஐஎன்எஸ் பெட்வா போா்க் கப்பலில் மாலுமியாக பணியாற்றி வந்தவா் ரமேஷ் செளத்ரி (22). இவா் துப்பாக்கி குண்டால் காயமடைந்து இறந்த நிலையில் கப்பலில் இருந்து மீட்கப்பட்டாா்.
Advertisement
Advertisement
அவரது சடலத்தின் அருகே பணிக்காக அளிக்கப்பட்டிருந்த துப்பாக்கியும் இருந்தது.
ராஜஸ்தானில் உள்ள ஜோத்பூருக்கு விடுமுறையில் சென்றிருந்த அவா் அண்மையில்தான் பணிக்கு திரும்பினாா். அவரது மரணம் தொடா்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என கடற்படை செய்தித் தொடா்பாளா் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளாா்.
எனினும், செளத்ரியின் மரணம் தற்கொலையா என்பது குறித்து அந்த அறிக்கையில் எதுவும் குறிப்பிடப்படவில்லை.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.