முகப்பு
இந்தியா

அசாம் முன்னாள் முதல்வர் சுவாசப் பிரச்னை காரணமாக மருத்துவமனையில் அனுமதி

அசாம் மாநில முன்னாள் முதல்வர் பிரபுல்லா குமார் மகாந்தா சுவாசப் பிரச்னை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

Updated On : 16 ஜனவரி, 2021 at 4:53 PM
அசாம் மாநில முன்னாள் முதல்வர் பிரபுல்லா குமார் மகாந்தா (கோப்புப்படம்)
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 12:48 AM

அசாம் மாநில முன்னாள் முதல்வர் பிரபுல்லா குமார் மகாந்தா சுவாசப் பிரச்னை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அசாம் மாநிலத்தின் முன்னாள் முதல்வரான பிரபுல்லா குமாருக்கு மகாந்தா வெள்ளிக்கிழமை இரவு திடீரென நெஞ்சு வலியும், சுவாசப் பிரச்னையும் ஏற்பட்டது.

அதனைத் தொடர்ந்து அவர் கெளஹாத்தியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை தற்போது சீராக உள்ளதாகவும், தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

உயர் இரத்த அழுத்த பிரச்னைகளைத் தொடர்ந்து மகாந்தா கடந்த 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். மகாந்தா தற்போது பஹாரம்பூர் சட்டமன்றத் தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினராக உள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.