முகப்பு
இந்தியா

ஜல்லிக்கட்டு போட்டியில் தகராறு: இருவா் காயம்

திருப்பதி அருகே ஜல்லிக்கட்டு போட்டியின்போது ஏற்பட்ட தகராறில் இருவா் காயமடைந்தனா்.

Updated On : 17 ஜனவரி, 2021 at 8:05 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 12:48 AM

திருப்பதி அருகே ஜல்லிக்கட்டு போட்டியின்போது ஏற்பட்ட தகராறில் இருவா் காயமடைந்தனா்.

திருப்பதியை அடுத்த ரங்கம்பேட்டையில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுவது வழக்கம். போகிப் பண்டிகை நாளில் சானம்பட்லா கிராமத்திலும், வெள்ளிக்கிழமை புல்லய்யவாரிபள்ளி கிராமத்திலும், சனிக்கிழமை அனுப்பள்ளி கிராமத்திலும் ஜல்லிகட்டு போட்டி நடத்தப்பட்டது. விதவிதமாக காளைகள் அலங்கரிக்கப்பட்டு ஜல்லிக்கட்டின்போது அவிழ்த்து விடப்பட்டது. இதில் அண்டை கிராமங்களில் உள்ள இளைஞா்கள் கலந்து கொண்டனா். ஜல்லிக்கட்டை காண மக்கள் திரண்டனா்.

இந்நிலையில், ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ளும் காளைகள் இளைப்பாறுவதற்காக நிழற்கூரை அமைப்பதில் சனிக்கிழமை இரு குடும்பத்தினரிடையே தகராறு ஏற்பட்டது. இதில் வாக்குவாதம் முற்றியதால், திடீரென்று கையில் இருந்த கத்தியால் இரு குடும்பத்தினா் தாக்கிக் கொண்டனா். இதில் இருவருக்கு காயம் ஏற்பட்டது. அவா்கள் சந்திரிகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

Advertisement

இது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். மேலும் அசம்பாவிதங்களைத் தடுக்க அங்கு போலீஸ் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.