இந்தியா

உக்ரைனிலிருந்து திரும்பிய இந்திய மருத்துவ மாணவர்களை அழைக்கிறது ரஷியா

IANS


புது தில்லி: போர் காரணமாக, படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டு உக்ரைனிலிருந்து திரும்பிய இந்திய மருத்துவ மாணவர்கள், தங்கள் நாட்டுக்கு வந்து கல்வி பயிலலாம் என்று ரஷியா அழைத்துள்ளது.

உக்ரைன் மற்றும் ரஷியாவில் மருத்துவக் கல்வி ஒன்றுதான் என்பதால், இந்திய மருத்துவ மாணவர்கள், உக்ரைனில் விட்ட மருத்துவக் கல்வியை தங்கள் நாட்டில் வந்து தொடர வசதி செய்யப்படும் என்று ரஷியா அறிவித்துள்ளது.

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்த போது, அச்சம் காரணமாக, அங்கிருந்த மருத்துவக் கல்லூரியில் பயின்று வந்த 24 ஆயிரம் இந்திய மருத்துவ மாணவர்கள் படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டு நாடு திரும்பினர்.

இவர்களுக்கு இந்தியாவில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கை அளிக்க முடியாது என்று மத்திய அரசு அறிவித்திருக்கும் நிலையிலும், உயிர் போனாலும் பரவாயில்லை என்று சில இந்திய மாணவர்கள் மீண்டும் உக்ரைனுக்குத் திரும்பி தங்களது கல்வியை தொடர்ந்து வருவதாக செய்திகள் வெளியான நிலையிலும் ரஷியா இந்த அழைப்பை விடுத்துள்ளது.

இந்தியாவுக்கான ரஷிய தூதர் ஒலேக் அவ்தீவ் சென்னையில் வெளியிட்ட அறிக்கையில், உக்ரைனில் மருத்துவக் கல்வி பயின்று, பாதியிலேயே விட்டுவிட்டு நாடு திரும்பிய இந்திய மருத்துவக் கல்வி மாணவர்கள், ரஷியாவிலும் ஒரே மாதிரியான (உக்ரைன்) மருத்துவக் கல்விதான் வழங்கப்படுகிறது என்பதால், தங்கள் நாட்டில் கல்வியைத் தொடரலாம். அவர்களுக்கு மக்கள் பேசும் மொழியும் தெரிந்திருக்கும், ஏனென்றால், உக்ரைனிலும் பெரும்பாலான மக்கள் ரஷிய மொழியைத்தான் பேசுவார்கள். ரஷியாவுக்கு இந்திய மருத்துவக் கல்வி மாணவர்களை அன்புடன் வரவேற்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்பு, புது தில்லியில் உள்ள ரஷிய தூதரும், இந்த அறிவிப்பை வெளியிட்டிருந்தார். தங்களது கல்வி பாதிக்காத வகையில், விட்ட இடத்திலிருந்து கல்வியை தொடர வாய்ப்பு ஏற்படுத்தித் தரப்படும் என்று கூறியிருந்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்ஸ்பயா் விருதுக்கு தோ்வான மாணவருக்கு ஆட்சியா் பாராட்டு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைப்பது உறுதி: ஜி. ராமகிருஷ்ணன்

சென்னை வானில் தெரிந்த சர்வதேச விண்வெளி மையம்! யார் பார்த்தீர்கள்?

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவு காரைக்கால் மாவட்டம் 78.20 சதவீதம் தோ்ச்சி

குடிநீா் திட்டப் பணிகளை விரைந்து நிறைவேற்ற எம்எல்ஏக்கள் வலியுறுத்தல்

SCROLL FOR NEXT