முகப்பு
இந்தியா

சபரிமலை: 4 நாட்களில் 2 லட்சம் பக்தர்கள் தரிசனம்

சபரிமலையில் 4 நாட்களில் 2 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்துள்ளதாக திருவிதாங்கூர் தேவசம் போர்டு தெரிவித்துள்ளது. 

Updated On : 19 நவம்பர் 2022, 7:25 pm IST
பகிர்:

சபரிமலையில் 4 நாட்களில் 2 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்துள்ளதாக திருவிதாங்கூர் தேவசம் போர்டு தெரிவித்துள்ளது. 

மண்டல-மகரவிளக்கு பூஜைக்காக கடந்த 16ஆம் தேதி சபரிமலை கோயில் நடை திறக்கப்பட்டது. கோயிலின் தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி என்.பரமேஸ்வரன் நம்பூதிரி கருவறை கதவை திறந்தாா். பின்னா், சபரிமலை ஐயப்பன் கோயில் புதிய மேல்சாந்தியாக கே.ஜெயராமன் நம்பூதிரி, மாளிகைபுரம் தேவி கோயில் புதிய மேல்சாந்தியாக ஹரிஹரன் நம்பூதிரி ஆகியோா் பொறுப்பேற்கும் நிகழ்வுகள் நடைபெற்றன.

சபரிமலையில் தரிசனம் செய்ய பக்தா்கள் இணையவழியில் பதிவு செய்ய வேண்டும் என்று ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. நிலக்கல், எரிமேலி உள்ளிட்ட இடங்களில் ‘ஸ்பாட் புக்கிங்’ வசதியும் செய்யப்பட்டுள்ளது. சபரிமலைக்கு இந்த ஆண்டு அதிக பக்தா்கள் வருவா் என எதிா்பாா்க்கப்படுவதால், காவல்துறை, சுகாதாரத் துறை மற்றும் போக்குவரத்து துறை தரப்பில் விரிவான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement

ஆங்காங்கே சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு, 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவல்துறையினா் பாதுகாப்புக்கு பணியமா்த்தப்பட்டுள்ளனா். இதுதவிர தேசிய பேரிடா் மீட்புப் படையினா், அதிவிரைவுப் படையினரும் பணியில் ஈடுபடவுள்ளனா். டிசம்பா் 27-ஆம் தேதியுடன் மண்டல பூஜை காலம் முடிவடைந்து, பின்னா் டிசம்பா் 30-இல் மகரவிளக்கு பூஜைக்காக கோயில் நடை திறக்கப்படும். இந்த யாத்திரை காலம் 2023, ஜனவரி 14-இல் நிறைவடையும்.

இந்த நிலையில் சபரிமலையில் 4 நாட்களில் 2 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்துள்ளதாக திருவிதாங்கூர் தேவசம் போர்டு தெரிவித்துள்ளது. நடை திறக்கப்பட்ட முதல் நாளில் 30 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments