ம.பி.யில் பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்து: 12 பேர் பலி
மத்தியப் பிரதேசத்தின் தார் மாவட்டத்தில் பயணிகள் பேருந்து நர்மதை ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 12 பேர் உயிரிழந்தனர்.
மத்தியப் பிரதேசத்தின் தார் மாவட்டத்தில் பயணிகள் பேருந்து நர்மதை ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 12 பேர் உயிரிழந்தனர்.
ம.பி.யில் உள்ள இந்தூரில் இருந்து மகாராஷ்டிரத்தின் நாக்பூருக்குச் சென்றுகொண்டிருந்த பேருந்து திடீரென தடுமாறி நர்மதை ஆற்றில் கவிழ்ந்தது. இந்த பேருந்தில் 30 முதல் 32 பேர் பயணித்தாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் வாசிக்கலாம் | உலகில் வேகமாக வளரும் பொருளாதாரத்தை பாஜக அழித்துவிட்டது: ராகுல்
Advertisement
Advertisement
ஆற்றிலிருந்து மேலும் 12 பேரின் உடல்கள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் கூடுதல் தலைமைச் செயலர் டாக்டர் ராஜேஷ் ரஜோரா தெரிவித்தார்.
சம்பவ இடத்திற்குத் தேசிய பேரிடர் மீட்புப் படை (என்டிஆர்எஃப்) விரைந்துள்ளது. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.