முகப்பு
இந்தியா

அமர்நாத் யாத்திரை தொடக்கம்: துணைநிலை ஆளுநர் வழிபாடு

அமர்நாத்தில் ஜம்மு-காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா வழிபாடு செய்தார். 

Updated On : 30 ஜூன் 2022, 12:48 pm IST
பகிர்:

அமர்நாத்தில் ஜம்மு-காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா வழிபாடு செய்தார். 

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது, 

கடந்த இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அமர்நாத் யாத்திரை பலத்த பாதுகாப்புடன் இன்று தொடங்கியுள்ளது. 

Advertisement

Advertisement

அதன் முதல் பூஜை இன்று நிறைவடைந்ததாகவும், அமர்நாத் யாத்திரைக்கு நாடு முழுவதும் இருந்து பக்தர்கள் வந்திருப்பதாகவும் அவர் கூறினார். 

மேலும், மகாதேவ் மற்றும் பாபா அமர்நாத் அருளால் பயணம் வெற்றியடையும் என்று எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. பக்தர்கள் நல்ல தரிசனம் பெறவும் அவர்கள் பத்திரமாக வீடு திரும்பவும் பிரார்த்திக்கிறேன். 

இந்த வாரத் தொடக்கத்தில், ஜம்முவில் அமர்நாத் யாத்திரைக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை சின்ஹா ​​ஆய்வு செய்தார்.

அமர்நாத் பனிக்குகை நோக்கிய 43 நாட்கள் பயணம், காஷ்மீரில் உள்ள இருமுகாம்களில் இருந்து இன்று தொடங்கி, ஆகஸ்ட் 11-ஆம் தேதி முடிவடைகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments