முகப்பு
இந்தியா

விமானப்படை நாள்...  இந்திய விமானப்படை வீரர்களுக்கு பிரதமர் வாழ்த்து!

விமானப்படை நாளையொட்டி இந்திய விமானப்படை வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Updated On : 31 அக்டோபர் 2022, 12:37 pm IST
பகிர்:

விமானப்படை நாளையொட்டி இந்திய விமானப்படை வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் அக்டோர்பர் 8ஆம் தேதி இந்திய விமானப்படை நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, 90 ஆவது இந்திய விமானப்படை நாள் சனிக்கிழமை கொண்டாடப்படுகிறது. 

இதையடுத்து இந்திய விமானப்படை வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திரமோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். 

Advertisement

Advertisement

இதுகுறித்து அவர் தனது ட்விட்டரில் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், 

"விமானப்படை நாளில், துணிச்சலான விமானப்படை வீரர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் எனது வாழ்த்துகள். வானம் பிரகாசமாக உள்ளது என்ற முழக்கத்தின்படி, இந்திய விமானப்படை பல தசாப்தங்களாக தனிச்சிறப்பு வாய்ந்த திறமையை வெளிப்படுத்தி வருகின்றது. ஆபத்து காலங்களில் அவர்கள் தேசத்தைப் பாதுகாத்து, குறிப்பிடத்தக்க மனித உணர்வையும், பேரழிவுகளின் போது குறிப்பிடத்தக்க பணிகளைக் வெளிப்படுத்தியுள்ளனர் என பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments