முகப்பு
இந்தியா

ராகுல் காந்தி முதலில் நாட்டின் வரலாற்றைப் படிக்க வேண்டும்: அமித் ஷா

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி முதலில் நாட்டின் வரலாற்றைப் படிக்க வேண்டும் என உள்துறை அமைச்சர் அமித் ஷா தாக்கிப் பேசியுள்ளார்.

Updated On : 10 செப்டம்பர் 2022, 5:07 pm IST
பகிர்:

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி முதலில் நாட்டின் வரலாற்றைப் படிக்க வேண்டும் என உள்துறை அமைச்சர் அமித் ஷா தாக்கிப் பேசியுள்ளார்.

ராகுல் காந்தியின் பாரதத்தை இணைப்போம் யாத்திரை குறித்து அமித் ஷா பேசியதாவது: “ வெளிநாட்டு தயாரிப்பில் உருவான ஆடையை அணிந்து கொண்டு ராகுல் காந்தி பாரதத்தை இணைப்போம் யாத்திரையை மேற்கொண்டு வருகிறார். அவர் நாடாளுமன்றத்தில் பேசியதை அவருக்கும் அவரது கட்சியினருக்கும் நினைவு கூற விரும்புகிறேன். இந்தியா ஒரு தேசமே கிடையாது என அவர் கூறியிருந்தார். இதை எந்தப் புத்தகத்தில் அவர் படித்தார். இந்த தேசத்திற்காக லட்சக்கணக்கான மக்கள் தங்கள் இன்னுயிரை தியாகம் செய்துள்ளனர். ராகுல் பாரதத்தை இணைக்க சென்றுள்ளார், ஆனால், அவர் இந்திய வரலாற்றை முதலில் படிக்க வேண்டும் என நான் நினைக்கிறேன். காங்கிரஸால் நாட்டின் முன்னேற்றத்திற்காக உழைக்க முடியாது. காங்கிரஸால் வாக்கு வங்கிக்காக மட்டுமே உழைக்க முடியும்.”  என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments