முகப்பு
இந்தியா

மோடி அரசு பணக்கார இந்தியர்களுக்கான அரசு: ராகுல்காந்தி

மத்தியில் ஆளும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு 5-6 பணக்கார இந்தியர்களுக்கான அரசு என காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி குறறம்சாட்டியுள்ளார். 

Updated On : 25 செப்டம்பர் 2022, 6:21 pm IST
பகிர்:


மத்தியில் ஆளும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு 5-6 பணக்கார இந்தியர்களுக்கான அரசு என காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி குறறம்சாட்டியுள்ளார். 

இதுதொடர்பாக அவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு, விவசாயிகள், இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கான அரசு அல்ல. இது 5-6 பணக்கார இந்தியர்களுக்கான அரசு, அவர்கள் விரும்பும் எந்த வணிகத்தையும் ஏகபோகமாக நடத்துகிறார்கள். 

இதுவரை இல்லாத அளவுக்கு வேலையில்லாத் திண்டாட்டத்தை இந்தியாவுக்கு நாங்கள் (காங்கிரஸ்) கொடுத்ததில்லை.

இந்தியா இன்று எதிர்கொள்ளும் விலை உயர்வை நாங்கள் ஒருபோதும் வழங்கவில்லை. மோடி அரசின் கொள்கைகள் நாட்டின் பொருளாதார நிலையை மோசமாக்கியுள்ளது என ராகுல்காந்தி கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.