முகப்பு
இந்தியா

சந்திரயான் -3 லேண்டிங்: ஹரியாணா பள்ளிகளில் நேரடி ஒளிபரப்பு!

சந்திரயான்-3 விண்கலம் நிலவில் தடம் பதிக்கும் நிகழ்வின் நேரடி ஒளிபரப்பு ஹரியாணாவில் உள்ள பள்ளிகளில் காட்சிப்படுத்தப்படும் என அம்மாநில கல்வி அமைச்சர் கன்வார் பால் தெரிவித்தார். 

Updated On : 23 ஆகஸ்ட் 2023, 1:27 pm IST
பகிர்:

சந்திரயான்-3 விண்கலம் நிலவில் தடம் பதிக்கும் நிகழ்வின் நேரடி ஒளிபரப்பு ஹரியாணாவில் உள்ள பள்ளிகளில் காட்சிப்படுத்தப்படும் என அம்மாநில கல்வி அமைச்சர் கன்வார் பால் தெரிவித்தார். 

மாணவர்களை ஊக்குவிப்பதற்கும் அவர்களின் தன்னம்பிக்கையை அதிகரிப்பதற்கும் மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளில் இன்று(புதன்கிழமை) மாலை 5.44-க்கு பள்ளிகளில் இதன் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும். 

அதன்படி புதன்கிழமை மாலை 5 மணி முதல் மாலை 6 மணி வரை பள்ளிகளைத் திறக்க மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

Advertisement

Advertisement

இந்த நிகழ்வு அனைவரிடத்திலும் ஆா்வத்தையும் மிகுந்த எதிா்பாா்ப்பையும் ஏற்படுத்தியுள்ளதோடு, இளைஞா்கள் மனதில் ஆராய்ச்சி மீதான ஆா்வத்தை தூண்டுவதாகவும் அமையும். இந்திய அறிவியல்-தொழில்நுட்பத் திறனுக்கு கிடைக்கப்போகும் இந்த வெற்றி அனைவருக்குமான கொண்டாட்டமாகவும் பெருமையாகவும் அமையும். விஞ்ஞான ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்புகளுக்கான சூழலை ஊக்குவிப்பதற்கான உந்துகோலாகவும் இந்த வெற்றி அமையப்போகிறது என்று அவர் கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments