முகப்பு
இந்தியா

எல்கர் பரிஷத் வழக்கு: கௌதம் நவ்லகாவுக்கு ஜாமீன் வழங்கியது உயர் நீதிமன்றம்

எல்கர் பரிஷத் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள கௌதம் நவ்லகாவுக்கு ஜாமீன் வழங்கியது உயர்நீதிமன்றம்.

Updated On : 19 டிசம்பர் 2023, 4:01 pm IST
கோப்புப்படம்
பகிர்:

எல்கர் பரிஷத் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள கௌதம் நவ்லகாவுக்கு ஜாமீன் வழங்கியது உயர்நீதிமன்றம்.

மாவோயிஸ்ட்டுகளுடன் தொடர்புடைய வழக்கில், சிறையில் இருக்கும் சமூக செயற்பாட்டாளர் கௌதம் நவ்லகாவுக்கு மும்பை உயர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. 

கௌதம் நவ்லகாவின் ஜாமீன் கோரும் மனுவுக்கு நீதிபதி ஏ.எஸ்.கட்காரி அனுமதி அளித்தார். 

Advertisement

Advertisement

உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்கு ஏதுவாக, இந்த உத்தரவை 6 வாரங்களுக்கு நிறுத்தி வைக்குமாறு தேசிய புலனாய்வு முகமை நீதிமன்றத்தில் கோரியது.

அதனையடுத்து இந்த உத்தரவை மூன்று வாரங்களுக்கு நிறுத்தி வைத்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. 

2018 ஆகஸ்ட் மாதம் கௌதம் நவ்லகா கைது செய்யப்பட்டார். 2022 நவம்பர் மாதம் முதல் மும்பையில் உள்ள பொது நூலகத்தில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

2022 நவம்பர் மாதம் முதல் பலமுறை வீட்டுக்காவலை நீட்டித்து உத்தரவிட்டது உயர்நீதிமன்றம்.

ரூ. 1 லட்சம் காப்புத் தொகையாக செலுத்தி ஜாமீனில் வெளிவருவதற்கு உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments