மாநிலங்களுக்கு வரிப் பகிர்வின் 3வது தவணையாக ரூ.1.18 லட்சம் கோடி நிதி விடுவிப்பு!
மாநிலங்களுக்கு வரி பகிர்வின் மூன்றாவது தவணையாக ஜூன் மாதத்தில் ரூ.1.18 லட்சம் கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளதாக நிதி அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது.
புதுதில்லி: மாநிலங்களுக்கு வரி பகிர்வின் மூன்றாவது தவணையாக ஜூன் மாதத்தில் ரூ.1.18 லட்சம் கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளதாக நிதி அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது.
மூலதன செலவினங்களை விரைவுபடுத்தவும், அவற்றின் நலன் தொடர்பான செலவுகளுக்கு நிதியளிக்கவும், முன்னுரிமை திட்டங்களுக்கான வளங்களை கிடைக்க செய்யவும் மாநிலங்களுக்கு 2023ஆம் ஜூன் மாதத்தில் செலுத்த வேண்டிய வழக்கமான தவணையுடன் கூடுதலாக ஒரு அட்வான்ஸ் தவணை வழங்கப்படுகிறது.
வழக்கமான மாதாந்திர பகிர்வு ரூ.59,140 கோடிக்கு பதிலாக 2023 ஜூன் 12ஆம் தேதியன்று மாநில அரசுகளுக்கு வரி பகிர்வின் மூன்றாவது தவணை ரூ.1,18,280 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது.
Advertisement
Advertisement
தற்போது மத்திய அரசு வசூலிக்கும் வரியில் 41 சதவீதம், ஒரு நிதியாண்டில் 14 தவணைகளாக, மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.