அன்றாட வாழ்வில் யோகாவை ஏற்றுக்கொள்ளுங்கள்: குடியரசுத் தலைவர் முர்மு
அன்றாட வாழ்வில் யோகாவை ஏற்றுக்கொள்ளுங்கள் என்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார்.
அன்றாட வாழ்வில் யோகாவை ஏற்றுக்கொள்ளுங்கள் என்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21-ம் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது. அதன்படி, இந்தாண்டு 9-வது யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
யோகா நமது நாகரிகத்தின் பெரிய சாதனைகளில் ஒன்றாகும். மனிதக்குலத்திற்கு இந்தியாவின் பெரும் பரிசு யோகா. இது, உடலையும் மனதையும் ஒருநிலைப்படுத்துகிறது.
Advertisement
Advertisement
மக்கள் அனைவரும் தங்கள் அன்றாட வாழ்வில் யோகாவை ஏற்றுக்கொள்ளுங்கள். அதன் சக்தியை நீங்களே உணர்வீர்கள் என்று பதிவிட்டுள்ளார். மேலும் அவர் யோகா செய்யும் படங்களையும் அவர் பகிர்ந்து கொண்டார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.