முகப்பு
இந்தியா

வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவானது!

வடமேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. 

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 3:03 AM
கோப்புப்படம்
பகிர்:

வடமேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. 

வடமேற்கு வங்கக் கடலில், வடக்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்குப் பகுதியில் புதிதாக காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. 

இதையடுத்து இன்று வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. 

இது அடுத்த 48 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுப்பெறும் என்றும் பின்னர் வடமேற்கு திசையில் வடக்கு ஒடிசா மற்றும் அதை ஒட்டிய மேற்கு வங்க கடற்கரைப் பகுதிகளை நோக்கி நகரக் கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இதனால் ஒடிசாவில் வடக்கு மாவட்டங்களில் அடுத்த 4 நாள்களுக்கு கன மழை முதல் மிக கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. அதுபோல மேற்குவங்கத்தில் சில பகுதிகளிலும் மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  

முழு கட்டுரையைப் படிக்க →