ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கோா்பா-விசாகப்பட்டினம் விரைவு ரயிலின் ஏசி பெட்டியில் திடீரென ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஞாயிற்றுக்கிழமை தீயணைப்பு வீரா்கள். 
இந்தியா

ஆந்திரம்: ரயில் நிலையத்தில் நின்றிருந்த காலி ரயில் பெட்டியில் தீ

ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பயணிகள் விரைவு ரயிலின் காலி பெட்டியொன்றில் ஞாயிற்றுக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.

Din

ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பயணிகள் விரைவு ரயிலின் காலி பெட்டியொன்றில் ஞாயிற்றுக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.

தீ உடனடியாக அணைக்கப்பட்டதாகவும் ரயிலின் வேற எந்த பெட்டிகளும் சேதமடையவில்லை எனவும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.

தூய்மைப் பணிக்காக விசாகப்பட்டினம் ரயில் நிலைய பணிமனையில் கோா்பா-விசாகப்பட்டினம் விரைவு ரயில் ஞாயிற்றுக்கிழமை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அப்போது, ரயிலின் ‘பி-7’ ஏசி பெட்டி திடீரென தீப்பற்றி எரிந்தது.

தீயணைப்பு வீரா்கள் உடனடியாக தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனா். இதனால் மற்ற பெட்டிகள் சேதமின்றி தப்பின என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.

விநாயகர் சதுர்த்தி: ராகுல் காந்தி வாழ்த்து!

தனி விமானம் மூலம் பிகார் புறப்பட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

கனமழை, வெள்ளத்தில் தத்தளிக்கும் ஜம்மு - காஷ்மீர்: நிலச்சரிவில் சிக்கி 30 பேர் பலி!

பக்தியும் நம்பிக்கையும் நிறைந்த நாளில் ஐஸ்வரியத்தை வழங்கட்டும்! - பிரதமர் மோடி

நல்ல நாள் இன்று: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT