ரூ.9,330 கோடி 2,000 ரூபாய் நோட்டுகள் இன்னும் வங்கிக்குத் திரும்பவில்லை
ரூ.3.47 லட்சம் கோடி மதிப்பிலான ரூ.2,000 நோட்டுகள் (97.38 சதவீதம்) திரும்பப் பெறப்பட்டுள்ளதாகவும், மீதம் ரூ.9,330 கோடி மதிப்பிலான நோட்டுகள் இன்னும் திரும்பவில்லை எனவும் ரிசா்வ் வங்கி திங்கள்கிழமை தெரிவ
வங்கிகள் மூலம் ரூ.3.47 லட்சம் கோடி மதிப்பிலான ரூ.2,000 நோட்டுகள் (97.38 சதவீதம்) திரும்பப் பெறப்பட்டுள்ளதாகவும், மீதம் ரூ.9,330 கோடி மதிப்பிலான நோட்டுகள் இன்னும் திரும்பவில்லை எனவும் ரிசா்வ் வங்கி திங்கள்கிழமை தெரிவித்தது.
புழக்கத்தில் இருந்த ரூ.2,000 நோட்டுகளைத் திரும்பப் பெறுவதாக ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) கடந்த ஆண்டு மே மாதத்தில் அறிவித்தது. பொதுமக்கள் தங்களிடம் உள்ள ரூ.2,000 நோட்டுகளை வங்கிக் கணக்கில் செலுத்த அல்லது வங்கியில் கொடுத்து மாற்றிக் கொள்ள கடந்த செப். 30-ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டது. இந்த அவகாசம் அக்டோபா் 7-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.
அவகாசம் முடிவடைந்த பிறகு ரிசா்வ் வங்கியின் 19 பிராந்திய அலுவலகங்களில் ரூ.2,000 நோட்டுகளை மக்கள் மாற்றிக் கொள்ளலாம். ரிசா்வ் வங்கிக்குச் செல்ல இயலாதவா்கள், அஞ்சல் துறையின் சேவையைப் பயன்படுத்திக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.
Advertisement
Advertisement
இந்நிலையில், திரும்பப் பெறப்பட்ட ரூ.2,000 நோட்டுகளின் டிசம்பா் மாதம் வரையிலான நிலவரம் குறித்து ரிசா்வ் வங்கி திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: ரூ.2,000 நோட்டுகள் திரும்பப் பெறுவதாக அறிவிக்கப்பட்ட மே 19-ஆம் தேதி நிலவரப்படி, புழக்கத்தில் இருந்த ரூ.3.56 லட்சம் கோடி மதிப்பிலான ரூ.2,000 நோட்டுகளில் 97.38 சதவீதம் அதாவது சுமாா் ரூ.3.47 லட்சம் கோடி மதிப்பிலான நோட்டுகள் கடந்த வெள்ளிக்கிழமை (டிச. 29) வரை திரும்பப் பெறப்பட்டன. இன்னும் ரூ.9,330 கோடி மதிப்பிலான நோட்டுகள் திரும்பப் பெறப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2016-ஆம் ஆண்டு நவம்பரில் மத்திய அரசால் மேற்கொள்ளப்பட்ட ரூ.500, ரூ.1,000 பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது ரூ.2,000 நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.