முகப்பு
இந்தியா

முதலைகள் சுற்றித் திரியும் ஆற்றில் மகனை வீசிய தாய் கைது!

கர்நாடகாவில் கொடூரம்: முதலை நிறைந்த ஆற்றில் சிறுவனை வீசிய தாய்

Updated On : 6 மே 2024, 8:18 pm IST
கோப்புப்படம்.
பகிர்:

பெங்களூரு: கர்நாடகாவில் கணவருடன் சண்டையிட்ட பெண் ஒருவர் தனது 6 வயது ஊனமுற்ற மகனை முதலைகள் நிறைந்த கால்வாயில் தூக்கி வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வீட்டு உதவியாளராக பணிபுரிந்து வந்த சாவித்ரி(32), பிறவியிலேயே காது கேளாத மற்றும் வாய் பேச முடியாத தனது மகன் வினோத் தொடர்பாக தனது கணவர் ரவிக்குமாருடன்(36) அடிக்கடி சண்டையிட்டுள்ளார். இவர்களுக்கு 2 வயதில் ஒரு மகனும் உள்ளார்.

கொத்தனார் வேலை செய்யும் ரவி தன்னை பலமுறை கேலி செய்ததாகவும், மகனை கால்வாயில் தூக்கி எறிந்து கொல்லுமாறு கூறியதாகவும் சாவித்திரி காவல் துறையினரிடம் தெரிவித்துள்ளார்.

Advertisement

என் கணவர்தான் பொறுப்பு. மகன் இறக்கட்டும், அவன் செய்வதெல்லாம் உண்பது மட்டும்தான் என்று சொல்லிக் கொண்டே இருந்தார். என் கணவர் இப்படி சொல்லி கொண்டு இருந்தால், என் மகனால் எவ்வளவு சித்திரவதை தான் தாங்க முடியும். என் வலியை நான் எங்கே போய் பகிர்ந்து கொள்வேன்.

இந்த சண்டைக்குப் பிறகு, சாவித்திரி தனது மகனை உத்தர கன்னடா மாவட்டத்தில் உள்ள கால்வாய்க்கு அழைத்துச் சென்று முதலை நிறைந்த தண்ணீரில் வீசி உள்ளார்.

உள்ளூர் மக்கள் காவல் துறையினரை எச்சரித்தையடுத்து, அவர்கள் தீயணைப்பு அதிகாரிகளுடன் சேர்ந்து தேடுதலைத் தொடங்கினர். இரவு முழுவதும் தேடுதல் வேட்டை தொடர்ந்தது, மறுநாள் காலையில் குழந்தையின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. குழந்தையின் வலது கை காணவில்லை, அதே வேளையில் உடல் முழுவதும் முதலைகள் கடித்த அடையாளங்கள் இருந்தன.

இதனையடுத்து வீட்டில் உதவியாளராக பணிபுரியும் சிறுவனின் தாய் சாவித்ரி மற்றும் கொத்தனார் வேலை செய்யும் சிறுவனின் தந்தை ரவிக்குமார் ஆகியோரை காவல் துறையினர் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.